SOURCE :- BBC NEWS

குஜராத்தின் ஆமதாபாத்தில் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தை ஆமதாபாத் தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது.

ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம், விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும் வெளியாகியுள்ள படங்களில் விமானத்தில் நெருப்பு எரிவதையும் புகை எழும்புவதையும் காணலாம். விரிவான தகவல்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

SOURCE : BBC